இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்

தினகரன்  தினகரன்
இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயில் நடை மகரவிளக்கு  பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி  மாலை  திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜை நடந்து  வருகின்றன. மண்டல காலத்தை விட மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை   அதிகமாக காணப்படுகிறது. தினமும் சராசரி 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மகர  விளக்கு  பூஜைக்கு முன்னதாக நடக்கும் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி  கடந்த 11ம்  தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாரம்பரிய  முறைப்படி  பங்கேற்றனர். மகரவிளக்கு பூஜையை  முன்னிட்டு சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில்  அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளத்தில்  இருந்து நேற்றுமுன்தினம் ஊர்வலமாக  புறப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று மாலை 6.20  மணியளவில் சன்னிதானத்தை  அடையும்.அதன் பிறகு ஐயப்பன்  விக்ரகத்தில் திருவாபரணம்  அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கும்.  இந்த  சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். மகரஜோதியை தரிசிப்பதற்காக  சபரிமலையில் நேற்று முன்தினம் முதலே பக்தர்கள்  குவிந்து வருகின்றனர். இன்று ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஜித் மேற்பார்வையில்  சன்னிதானம் முதல் பம்பை வரை போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை