'ஒமைக்ரான்' பாதிப்பு உயர்வு ! ராஜஸ்தானில் மட்டும் ஒன்பது பேருக்கு தொற்று

தினமலர்  தினமலர்
ஒமைக்ரான் பாதிப்பு உயர்வு ! ராஜஸ்தானில் மட்டும் ஒன்பது பேருக்கு தொற்று

புதுடில்லி, டிச. 6-மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு பேர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒன்பது பேர், டில்லியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 17 பேருக்கு உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுதும் இந்த புதிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.'இந்த வகை தொற்று 30க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதால், வேகமாக பரவும் தன்மை உடையது' என ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனை, இந்த புதிய வகை தொற்று வலுவிழக்க செய்யுமா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கட்டாய பரிசோதனை

இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்ரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளை ஆபத்துள்ள நாடுகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.

முடிவு வெளியாகும் வரை அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப் படுவது இல்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது மாதிரிகள் மரபணு வரிசை சோதனைக்காக 'இன்சாகாக்' மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நம் நாட்டில் ஒமைக்ரான் வகை தொற்று முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 வயது நபர் மற்றும் உள்ளூரை சேர்ந்த 46 வயது டாக்டருக்கு ஒமைக்ரான் வகை தொற்று 2ம் தேதி கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுஉள்ளனர். பாதிக்கப்பட்ட டாக்டர் எந்த நாட்டிற்கும் சமீபத்தில் செல்லவில்லை.

குஜராத்தை சேர்ந்த 72 வயது நபர் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த 33 வயது இளைஞருக்கும் ஒமைக்ரான் தொற்று நேற்று முன்தினம் உறுதியானது.இந்நிலையில் கிழக்கு ஆப்ரிக்காவின் தான்சானியாவில் இருந்து சமீபத்தில் டில்லி வந்த 37 வயது நபருக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி மற்றும் உடல் வலி ஏற்பட்டதை அடுத்து, 2ம் தேதியன்று டில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து மஹாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்திற்கு வந்த பெண் மற்றும் அவரது இரண்டு பெண்கள், அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது இரண்டு பெண்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று நேற்று உறுதியானது.ஐரோப்பிய நாடான பின்லாந்தில் இருந்து மஹாராஷ்டிரா வந்த நபருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் ஏழு பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு நேற்று ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நாடு முழுதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மூன்றாவது அலை

இது குறித்து டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சர்வதேச பயணியர் விமானங்களுக்கு முழுமை யான தடை விதித்தால் மட்டுமே ஒமைக்ரான் நம் நாட்டில் பரவுவதை தடுக்க முடியும். மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, தொற்று தடுப்பு நடவடிக்கையை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். டில்லியில் 90 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 60 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரை நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மத்திய அரசின் முடிவை ஏற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விலங்குகளால் உருமாறும் வைரஸ்!


கொரோனா தொற்று உருமாற்றம் அடைவது குறித்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்நடை மற்றும் உயிரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மனிதர்களிடம் இருந்து நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவும் போது உருமாற்றம் அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதுடில்லி, டிச. 6-மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு பேர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒன்பது பேர், டில்லியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 17 பேருக்கு உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று நேற்று

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை