சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1.01 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்

தினமலர்  தினமலர்
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1.01 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்

சென்னை :சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், 1.01 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 48 ஆயிரத்து 77; இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,359; இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4,346; மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில், 14 ஆயிரத்து 739.
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில், 28 ஆயிரத்து 209; முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2,397; கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 554; முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 1,474 பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள்
பங்கேற்றனர்.

ஆதார் எண் அவசியம்



தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை பெறும் பயனாளிகள், அடையாள சான்றாக தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்போரிடம், ஆதார் எண் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து பயனாளிகளிடம், மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெற, மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை :சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை