லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இவ்வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘உத்திரபிரதேச மாநில அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் கரிமா பிரசாத் ஆஜரானார்.
அப்போது அவர், ‘இவ்வழக்கில் பலரது வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.
நேற்று மட்டும் ஏழு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
மொத்தமுள்ள 69 சாட்சியங்களில் 30 பேரின் வாக்குமூலங்கள் சட்டப் பிரிவு 164-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 23 பேர் வன்முறையை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘நூற்றுக்கும் பேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்ற விவகாரத்தில் 23 பேர் மட்டும் தான் நடந்த வன்முறையை நேரடியாக பார்த்தார்களா?; இது நம்பும்படியாக இல்லை’ என்றார். தொடர்ந்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘23 பேர் வன்முறையை நேரில் பார்த்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
இந்த சாட்சிகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அச்சம் என்ன என்பதை மாநில அரசு புரிந்து கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் 164 சட்ட விதிகளின் நேரடியாக வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும்.
பலியானவர்கள் தொடர்பாக தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
