24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு

தினமலர்  தினமலர்
24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு

புதுடில்லி : பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பெண்கள் சாதாரணமாக 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரு டாக்டர்களின் பரிந்துரையும் தேவை என விதிகள் அமலில் உள்ளன.பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்டத்திருத்தம், பார்லிமென்ட்டில் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்தோருக்கு கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான அனுமதி, 20 முதல் 24 வாரங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அதன் விவரம் வருமாறு: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோர், விதவைகள், உடல் குறைபாடு உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், 24 வாரம் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல் 24 வார கரு வளர்ச்சி அடைந்த நிலையில், கருவுற்ற பெண்ணுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என உறுதியானாலும் கருக்கலைப்பு செய்யலாம்.

கருவில் இருக்கும் குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமல் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்புள்ளது கண்டறிப்படினும், அதனை கலைக்க அனுமதி வழங்கப்படும். காலம் கடந்த நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பிணிக்கு பாதிப்பு நேரலாம் என உறுதி செய்யப்படுவோருக்கும் இந்த விதிகள் பொருந்தும். இதுபோன்றவர்களை பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ வாரியம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதுடில்லி : பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை