ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்றி தி.மு.க., சாதனை!

தினமலர்  தினமலர்
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்றி தி.மு.க., சாதனை!

சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, ஆளும் தி.மு.க., அதிகளவில் கைப்பற்றியுள்ளது. மாவட்ட ஊராட்சிகளிலும் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, அக்கட்சி சாதனை படைத்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துஉள்ளது.

அறிவிப்பு



இது மட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று முன்தினம் காலை துவங்கியது. மொத்தம், 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 151 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி, தி.மு.க., 94 இடங்களை கைப்பற்றியது; பல இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அ.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்., ஏழு இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், அனைத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றுவது உறுதியாகிஉள்ளது. இதேபோல, 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 1,415 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 829 இடங்களை தி.மு.க., கைப்பற்றியுள்ளது; பல இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது.

சாதனை



தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., நான்கு; இந்திய கம்யூ., மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகள் மற்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 186 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடந்தது.

மொத்தம் 3,007 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், இதுவரை 2,609 பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆதரவு பெற்றவர்கள் தான், இதிலும் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல, 23 ஆயிரத்து 211 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், இதுவரை, 16 ஆயிரத்து 906 பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை, 38 மணி நேரத்தை கடந்து, தொடர்கிறது. இன்று வெற்றி நிலவரம் முழுதும் தெரிய வாய்ப்புள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, தி.மு.க., 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.

சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, ஆளும் தி.மு.க., அதிகளவில் கைப்பற்றியுள்ளது. மாவட்ட ஊராட்சிகளிலும் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை