உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்களுக்கு ஸ்டாலின் நன்றி

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்களுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை:'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: ஒன்பது மாவட்டங்களில், தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்று வரும் செய்தி, ஐந்து மாத தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

மிக கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளில், 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம். நாள்தோறும் பல்வேறு திட்டங்களைத் துவங்கி வைத்து வருகிறோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் வெற்றி.நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் தி.மு.க., அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது என, மக்கள் நினைக்கின்றனர்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது, தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த, தமிழக மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3வது பெரிய கட்சி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:



தமிழகத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 47க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பா.ம.க., கைப்பற்றி உள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பா.ம.க.,வினர் வெற்றி பெற்று உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால், கிராமங்களும், மக்களும் முன்னேறுவர். அதனால் தான் பா.ம.க., தனித்து போட்டியிட்டது. பா.ம.க.,வின் வலிமையையும், களப் பணிகளையும் ஒப்பிடும்போது, பா.ம.க.,வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து, அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, பா.ம.க., பெற்றுள்ள வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது.தனித்து போட்டியிட்ட போதிலும், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை, பா.ம.க., கைப்பற்றியதன் வாயிலாக, மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை:'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை