'அரசுடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி'

தினமலர்  தினமலர்
அரசுடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி

''லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக, மத்திய அரசுடன் உடனடி ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,'' என பிரியங்கா கூறினார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில், ராகுல் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா ஆகியோர், டில்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இச்சம்பவம் குறித்து அரசியல் குறுக்கீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ராகுல் கூறியதாவது:லக்கிம்பூரில் எட்டு பேர் உயிர் இழந்த கலவரம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி உள்ளார். இவரது தந்தை அஜய் மிஸ்ரா, மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இதனால் ஆஷிஷ் மீதான விசாரணை முறையாகவும், நியாயமாகவும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா கூறியதாவது;விவசாயிகள் கொலையான விவகாரம் தொடர்பாக விசாரணை கோருவது, எங்கள் கட்சியோ, நானோ, தொண்டர்களோ அல்ல. இது மக்கள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் கோரிக்கை. எனவே, மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்விஷயத்தில் எங்கள் கருத்துகளை, ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கி உள்ளோம். இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

''லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக, மத்திய அரசுடன் உடனடி ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,'' என பிரியங்கா கூறினார்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை