தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேற வைத்த தடுப்பூசி திட்டம்!

தினமலர்  தினமலர்
தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேற வைத்த தடுப்பூசி திட்டம்!


கண்ணுக்குப் புலப்படாத கொரோனா தொற்று என்ற எதிரியிடம் இருந்து, தற்போது சுதந்திரம் பெறும் நம் முயற்சிகள் தொடர்கின்றன.



நாம் அறிந்தவரை, பரிசோதனை, தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட நிர்வாக அளவிலான நடவடிக்கைகளுடன், தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாகவே, தொற்றை கட்டுப்படுத்த முடியும். எனினும், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க நீண்ட கால நோய் எதிர்ப்பாற்றல் தேவை.

இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை தாண்டி, குறுகிய காலத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஜனவரி 16ல் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி கண்டுபிடிப்பு மட்டுமின்றி, புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, சிகிச்சை முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை, 'கோவிட் சுரக் ஷா மிஷன்' வழங்கியது.இதன் விளைவாக, ஓராண்டு காலத்திற்குள் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முக கவசங்கள், முழு உடல் கவச உடைகள், பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில், இரண்டு மாதத்திற்குள் இந்தியா தன்னிறைவு அடைந்தது.

புரட்சிகரமான தடுப்பூசி



தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த நாடு முழுதும் தகுதி வாய்ந்தோருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பிரதமரின் முடிவு, பொதுசுகாதாரத்தை நோக்கிய அரசின் வலுவான நிலையை எடுத்துரைத்தது.சில மாதங்களிலேயே, உலக அளவில் மிக அதிகமாக 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி, குறிப்பிடத் தகுந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தற்போது தினமும் 11 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மக்கள் முழு மனதுடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தேசிய அளவிலான தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக நான் தீவிரமாக நம்புகிறேன். இந்த ஆண்டின் இறுதிக்குள், ஒட்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டு மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், ஊட்டச்சத்து, தண்ணீர் மற்றும் துப்புரவு சம்பந்தமான சேவைகளை வழங்குவதில், மிகச் சிறந்த துவக்கப் புள்ளியாக கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படக் கூடும். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டிற்கு உரிய மரியாதையை செலுத்தும் வகையில், 75 கோடி தடுப்பூசிகளை வினியோகித்து மாபெரும் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.இதில், நம் மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்கள் சிறந்த உறுதிப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றியுள்ளனர்.


பெரியவர்களுக்கான உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம், தற்சார்பு இந்தியாவை நோக்கிய, நாட்டின் உறுதித்தன்மையை வலுப்படுத்துகிறது. தற்சார்பு இந்தியா என்பது, அத்தியாவசிய தொழில்நுட்பங்களுக்கான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு சார்ந்தது. தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி போன்றவை ராக்கெட் அறிவியல் மற்றும் அணு திட்டத்திற்கு இணையானது.

இதில், ஏராளமான அறிவியல், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் தர உறுதித்தன்மை நடைமுறைகள் அடங்கியுள்ளன.எனவே, தேவையான கச்சா பொருள், மேம்பட்ட தொழில்நுட்பம் அடங்கிய தடுப்பூசியின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் சூழலியலை உருவாக்குவது அவசியம்.
இதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் நிலையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புரட்சிகரமான தடுப்பூசி திட்டம் மற்றும் கொரோனா தொற்றுக்கான நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை, இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையின் பலவீனம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த, கொரோனா பெருந்தொற்று நம்மை நிர்பந்தித்துள்ளது. இதன் வாயிலாக, மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான தருணம் வந்துவிட்டது. அதற்காக நாடு தயார் நிலையில் உள்ளது.
- மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்.

கண்ணுக்குப் புலப்படாத கொரோனா தொற்று என்ற எதிரியிடம் இருந்து, தற்போது சுதந்திரம் பெறும் நம் முயற்சிகள் தொடர்கின்றன. nsimg2844743nsimgநாம் அறிந்தவரை, பரிசோதனை, தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை