ஒரே நாளில் 97,894 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51.18 லட்சமாக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே நாளில் 97,894 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51.18 லட்சமாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51. 18 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97,894 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.

பரிசோதனைகளும் அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக அதிகளவில் உள்ளது.

தினமும் நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதலளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,42,361ல் இருந்து 40,25,080 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 82719 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,09,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு 1. 63 சதவீதமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 78. 64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

.

மூலக்கதை