தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்

தினமலர்  தினமலர்
தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்

அகர்தாலா: கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், எடியூரப்பா மற்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என நீண்டுகொண்டே போகிறது.



இந்நிலையில், நேற்று திரிபுரா பா.ஜ. முதல்வர் பிப்லப் தேவ் குமார் தனது டுவிட்டரில் கூறியது, கடந்த சில தினங்களுக்கு எனது குடும்ப உறுப்பினர் சிலருடன் தொடர்பில் இருந்ததையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.

இதையடுத்து எனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையறிந்து உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளேன்.அதன் முடிவு இன்னும் வரவில்லை. இதையடுத்து எனது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.




மூலக்கதை