கர்நாடகா, ஜார்க்கண்டில் இன்று காலை நிலநடுக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகா, ஜார்க்கண்டில் இன்று காலை நிலநடுக்கம்

புதுடெல்லி: கர்நாடகா மாநிலம் ஹம்பியில் இன்று காலை 6. 55 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

ஹம்பியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4. 0 ஆக அளவிடப்பட்டுள்ளது. ஜாம்ஷெட்பூரில் நிலநடுக்கத்தின் அளவு 4. 7 ஆக இருந்தது.

திடீர் நிலநடுக்கத்தால் கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் மக்கள் பீதியில் உள்ளனர்.

இருப்பினும், மேற்கண்ட இடங்களில் உயிர் இழப்போ அல்லது உடைமைகளுக்கு சேதமோ ஏற்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தலைநகரமான டெல்லி உட்பட சில இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் மட்டும் கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் பத்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், பாதிப்பு ஏதும் ஏற்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை