துப்பாக்கியை காட்டி விமானியிடம் கொள்ளை: டெல்லியில் அதிகாலையில் துணிகரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
துப்பாக்கியை காட்டி விமானியிடம் கொள்ளை: டெல்லியில் அதிகாலையில் துணிகரம்

புதுடெல்லி: டெல்லியில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் யுவராஜ் திவேதியா (30). இவர், பரிதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 1 மணியளவில் டெல்லி ஐஐடி அருகே உள்ள மேம்பாலத்தில் காரில் வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 நபர்கள் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்தது.



அதிர்ச்சியடைந்த அவர் காரை நிறுத்தியதும், அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்து, யுவராஜை கத்தியால் சரமாரியாக குத்தினர். துப்பாக்கியை காட்டி  மிரட்டி அவரிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது உடைமைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

புகாரின் அடிப்படையில் கிஷன்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


.

மூலக்கதை