கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..!!

தினகரன்  தினகரன்
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக  2,17,353 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக உயர்ந்தது.* புதிதாக 1185 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,18,302 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,25,47,866 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,69,743 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. * இந்தியாவில் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1.84 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 2 லட்சமாக அதிகரித்தது. இன்று 2.17 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை