ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி

புதுடெல்லி: நாட்டில் முதன்முறையாக அன்றாட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 478 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், குஜராத், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், பிப்ரவரி பாதியிலிருந்து ெகாரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நாட்டில் முதன்முறையாக அன்றாட தொற்று எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,25,89,067 என்றளவில் உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் பலியாகினார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பதிவாகி வருவதால் மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,074 பேருக்கு தொற்று உறுதியானது. மும்பையில் மட்டும் 11,163 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

மும்பை நகரில் இதுவரை 4,52,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7 கோடியே 91,05,163 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஏப். 2ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முன்னதாக, கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பரிசோதானை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, கோவிட் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி என 5 வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை