உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை நாராயணசாமி  ராஜினாமா செய்தார். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.   இதற்கான அரசாணை புதுச்சேரி அரசிதழிலில் தலைமை செயலரால் வெளியிடப்பட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி நாளை (25ம் தேதி) புதுச்சேரி வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11. 20 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு மத்திய அமைச்சர்கள், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் பிரதமர் மோடி கார் மூலமாக கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார்.

அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

விழா முடிந்து காரில் புறப்பட்டு, லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பகல் 1. 20 மணிக்கு ெஹலிகாப்டர் மூலம் அவர் மீண்டும் சென்னை செல்கிறார்.

முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் கார் வந்து செல்லும் ஏர்போர்ட் சாலை, இசிஆர் ரோடு, காமராஜர் சாலை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்த மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து நாளை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஜிப்மர் ஆடிட்டோரியம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்டவை முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவையில் 7 ஆயிரம் போலீசார் குவிப்பு
சென்னையில் இருந்து மதியம் 2. 10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு 3. 35 மணிக்கு வருகிறார். கோவை  கொடிசியா அரங்கத்தில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், குடிநீர் வாரியம்,  நகராட்சி நிர்வாகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, மின்வாரிய  திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார்.

மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில்  நடக்கும் பா. ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை  நகருக்கு சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று  முதல் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று  மேலும், 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். மண் தோண்டிய  இடங்களில் மெட்டல் டிடெக்டர், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவிகள் மூலமாக சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.



குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், வடிகால்  பகுதிகளிலும் கண்காணிப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு  கண்டறியும் பிரிவினர் ேசாதனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டம்  நடைபெறும் மேடை, ெகாடிசியா வளாகம் செல்லும் பகுதி மற்றும் அதன்  சுற்றுப்பகுதியில் உள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்பு  எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கி உள்ள  நபர்கள், வாரண்ட் குற்றவாளிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின்  விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை