ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாள் முடக்கம் வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் நீட்டிப்பது பற்றி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மாநில அரசுகள் தாங்களாகவே இந்த முடக்கத்தை நீட்டித்து வருகின்றன. வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக, ஒடிசா மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலமும் முடக்கத்தை வரும் 20ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், ஒடிசாவுக்கு முன்பாகவே முடக்கத்தை நீட்டிப்பது பற்றி முதலில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை ரத்து செய்தார். பின்னர், அமைச்சரவையிலும், கட்சித் தலைமையுடனும் ஆலோசித்த பிறகு நேற்று முடக்கத்தை நீட்டிக்கும் அறிவிப்பு மீண்டும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை