ஏப். 15க்கு பிறகு கூட்டம் கூடினால் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிடும்: தவிர்க்க வழி கேட்கிறார் யோகி

தினகரன்  தினகரன்
ஏப். 15க்கு பிறகு கூட்டம் கூடினால் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிடும்: தவிர்க்க வழி கேட்கிறார் யோகி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா பணிகள் தொடர்பாக அம்மாநிலத்தை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ.க்களிடம் கடந்த 2 நாட்களாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில் அவர் கூறியதாவது: வரும் 15ம் தேதியோடு ஊரடங்கு தளர்த்தப்படலாம். அதன் பிறகும், ஒரே இடத்தில் மக்கள் அதிகளவில் கூடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மீண்டும் மக்கள் கூடினால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிவிடும்.  எனவே, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கூட்டம் கூடாமல் இருக்க, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து உங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

மூலக்கதை