உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,204-ஆக உயர்வு
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 36,204 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,97,609-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,48,447ஆக உள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் 7,52,241 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,58,688 பேர் குணமடைந்துள்ளனர் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,500 ஆக அதிகரித்துள்ளது.