பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரளாவில் ஜனவரி முதல் தடை

தினகரன்  தினகரன்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரளாவில் ஜனவரி முதல் தடை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த தடையை மீறுபவர்களுக்கு முதல் முறை 10,000, 2வது முறை குற்றம் செய்தால் 25,000, 3வது குற்றம் செய்தால் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மூலக்கதை