ராணுவ நிலைகள் மீது பாக். துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்
ராணுவ நிலைகள் மீது பாக். துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காலை 10.15மணிக்கு தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கினார்கள். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள கெர்னி, குவாஸ்பா பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. எனினும் சேதவிவரங்கள் தெரியவில்லை.

மூலக்கதை