காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுகிறது: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 18-ந்தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதாகவும், அது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.