பஞ்சாப் மாநிலத்தில் ஒட்டுனரை தாக்கி மர்ம நபர்களால் கார் கடத்தல்
பதான்கோட்: பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மர்ம நபர்கள் சிலர் ஒரு காரை வழிமறித்து கடத்தி சென்றதையடுத்து தீவிரவாதிகள் ஊடுறுவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் விமானத் தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் பதான்கோட் விமான தளத்தின் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல் தோடுத்தனர். அப்போதும் இதே போல் போலீசார் அதிகாரி ஒருவரின் காரை மறைத்து கடத்திச் செகன்றதாக கூறப்படுகிறது. மீண்டும் அதே போன்று மாதோபூர் பகுதியில் வாடகை காரில் சிலரை ஏற்றி சென்ற ஓட்டுனரிடம், பயணி ஒருவர் உடல் நலம் இல்லை என்று கூறியதால் காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காரில் வந்த பயணிகள் திடீரென ஒட்டுனரை அடித்து காயப்படுத்தி காரை கடத்தி சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட காரை மீட்க பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.