மே.வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பதற்றம் நீடிப்பதால் ராணுவம் தேவை: மாநில பாஜ ஆளுநரிடம் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மே.வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பதற்றம் நீடிப்பதால் ராணுவம் தேவை: மாநில பாஜ ஆளுநரிடம் கோரிக்கை

கொல்கத்தா: கலவரத்தால் மேற்குவங்க மாநிலத்தில் தடைபட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தொடர்ந்து அம்மாநிலத்தில் பதற்றம்  நீடிப்பதால் ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று, மாநில பாஜ நிர்வாகிகள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மேற்குவங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவிற்கும் இடையே கடுமையான போட்டி  நிலவிவருகிறது. தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்தகணிப்பின்படி பாஜ 18 முதல் 26 தொகுதிகள் வரை, அம்மாநிலத்தில் வெற்றி பெறலாம்  எனவும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 13 முதல் 21 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் ஒருபுறம் இருக்க, தேர்தலின் போது ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது வரையிலும் மாநிலத்தில் அடங்கவில்லை.   கலவரத்தினால் தடைப்பட்ட கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 200ல் இன்று மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைப்பெற்று  வருகிறது.

தேர்தல் பதற்றம் இன்றளவும் மாநிலத்தில் குறையாத நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் மேலும் பதற்ற  நிலையை உண்டாக்கலாம் என கருத்தில் கொண்டு பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை இறக்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது.   இதற்காக ஆளுநரை, மாநில பாஜ குழு சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளது.   இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப்கோஷ் கூறுைகயில், ‘‘மேற்குவங்கத்தில் பாஜவை வீழ்த்த வேண்டும் என்பதே திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் குறிக்கோளாக உள்ளது, ஆனால் பாஜவின் குறிக்கோள் தேர்தல் முடிவின் போது ஏற்படவுள்ள கலவரங்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுக்காக்க  வேண்டும் என்பது தான்’’ என்றார்.


.

மூலக்கதை