சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிராக பெரும் போராட்டம்! - பரிசுக்குள் சேவைக்கு வரும் 800 மின்சார பேரூந்துகள்!!
தலைநகரில் சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்துச் செல்வதை அடுத்து, விரைவில் பரிசுக்குள் 800 மின்சார பேரூந்துகள் சேவைக்கு வர உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை இதனை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த பேரூந்துகள் சேவைக்கு வரும் என அறிய முடிகிறது. டீசல் பேரூந்துகளால் சுற்றுச்சூழல் மிக மோசமான மாசடைவைச் சந்திக்கிறது என தெரிவிக்கப்பட்டு, €400 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று முன்னணி நிறுவனங்களான Heuliez Bus, Bollore மற்றும் Alstom நிறுவனங்களுக்கு இந்த பேரூந்தை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் ஒரே எண்ணிக்கையான பேரூந்துகளை RATP இவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150 பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும், 2022 ஆம் ஆண்டில் மேலதிக பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
