இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் "112"  நடைமுறைக்கு வந்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் 112  நடைமுறைக்கு வந்தது!

இந்தியா முழுவதும் இனி ஒரே ஒரு அவசர உதவி எண் 112 மூலம் காவல்துறை , ஆம்புலன்ஸ் , தீயணைப்புத்துறை , பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

எந்தத் துறையையும் அவசரமாகத்  தொடர்பு கொள்ள இனி,  ஒரே ஒரு மூன்று இலக்க எண்ணான "112 " என்னும் அவசர கால இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். 

மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த இந்த திட்டத்தில் "இமாச்சல் பிரதேசம்" மாநிலம் முதன் முதலாக இணைந்தது.  2019 ஆம் ஆண்டு பிப்ரவரி  19 ஆம் தேதி மத்திய அரசு "112" அவசர கால உதவி எண் சேவையை நடைமுறைப்படுத்தியது.

இதில் தமிழகம் , கேரளா , புதுச்சேரி  உள்ளிட்ட  16 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அவசர உதவிக்கு, ஒரே தொலைபேசி எண் 112 என்ற திட்டத்தில் இணைந்துள்ளனர்.  இதன் படி அவசர கால உதவி எண்களாக இருந்து இதுவரை தொடர்பு கொண்ட, காவல்துறை -100, தீயணைப்பு துறை - 101, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவை - 108 , பெண்களின் பாதுகாப்பிற்கு -  1090  போன்றவை  அனைத்தும் ஒரே எண்ணாக     " 112" என்ற எண்ணை மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

இனி அவசர சேவை உதவிக்கு அனைத்து வகையான துறைக்கும் இலவச தொலைபேசி எண் "112" மட்டுமே. இதன் மூலம் தமிழக மக்கள் அனைவரும் "112"என்ற எண்ணை மறவாமல் தேவைப்படும் பட்சத்தில் அரசிடம் இருந்து உதவிகளை நாடலாம். இந்த தொலைபேசி எண்ணிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது முற்றிலும் இலவசமானது. இதற்கான மொபைல் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. 
இதனை பயன்படுத்தியும் எளிதாக அவசர கால உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஆப் பெயர் "112 India " ஆகும் . புதிய அவசர கால உதவி எண் தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அது பற்றிய விழிப்பணர்வை நீங்களும் ஏற்படுத்தலாம்.

மூலக்கதை