தகுதி நீக்கத்தை எதிர்த்து சரத்யாதவ் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு
புதுடில்லி: தனது ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார் சரத்யாதவ்.
பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியை மாற்றினார்.ஐக்கிய ஜனதா தள முதல்வர் நிதிஷ்குமார். இதில் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் சரத்யாதவ், அலி அன்சாரி ஆகியோர் கட்சிக்கு எதிராக நடந்ததாக புகார் எழுந்தது. இருவரும் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்ததால் இவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. இதையடுத்து இருவரையும் கடந்த 4-ம் தேதி தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.இந்நிலையில் தகுதி நீக்கத்தைஎதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சரத் யாதவ் வழக்கு தொடர்ந்தார்.