ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது நிச்சயம்: ராகுல்
புதுடில்லி : பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்துள்ளது என காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ரபேல் விமான ஒப்பந்தத்தம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மாற்றி மாற்றி பேசுகிறார். முதலில் ஒப்பந்த தகவல்களை வெளியிட தயார் என கூறினார். தற்போது அது மிகப்பெரிய ரகசியம் என கூறி தகவல்களை வெளியிட முடியாது என மறுக்கிறார்.
ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமரிடம் கேட்டால் என் கண்களை பார்த்து பேச தயக்கப்பட்டு நெளிகிறார். இதிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது நிச்சயம் என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.