தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன: ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் பேச்சு
டெல்லி: தூத்துக்குடியில் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன என்று ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கலவரத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயக்க நீதிமன்றம், மத்திய மாநில அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.தூத்துக்குடி மக்களின் நலன், விருப்பத்தின் பேரில் ஆலையை இயக்க விரும்புகிறேன். தூத்துக்குடி சம்பவம் மனதிற்கு வலி ஏற்படுத்த கூடியதாக உள்ளது என்று அனில் அகர்வால் கூறினார். மேலும் சட்டங்களுக்கு உட்பட்டு ஆலை இயக்கப்படும் என்றும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளார்.