கோரக்பூர் சுற்றுலா தலமல்ல : ராகுல்காந்தி மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் பாய்ச்சல்
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான மருத்துவமனையை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நேரில் சென்று பார்வையிட்டார். இதனிடையே உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் கோரக்பூரில் நடைபெறும் சுகாதார இயக்க நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் பேட்டியளித்த அவர் தூய்மை திட்டம் குறித்து புரிந்து கொள்ளாத இளவரசர் ஒருவர் டெல்லியில் உள்ளார். கோரக்பூர் ஒன்றும் பிக்னிக் ஸ்பாட் இல்லை என கூறினார். உத்தரபிரதேசத்தை ஆண்ட அரசுகள் தங்களது சுயநலத்திற்காக ஊழல் நிறைந்ததாக மாற்றின. இதனால், மக்கள் அடிப்படை வசதி ஏதும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். தற்போது பா.ஜ.க அரசு மாநிலத்தை மாற்றி வருகிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.