லாட்ஜில் விஷம் குடித்து 3 பேர் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாட்ஜில் விஷம் குடித்து 3 பேர் தற்கொலை

திருமலை- புதுச்சேரியை சேர்ந்தவர் சரவணன். இவரது சகோதரி சாந்தி, மகள் பவித்ரா.

இவர்கள் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மந்திராலயத்தில் ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு கடந்த 24ம் தேதி வந்தனர். தரிசனத்திற்கு பிறகு அதே பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இந்த அறை 2 நாட்களாக திறக்கப்படவில்லையாம். நேற்று அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் விடுதி ஊழியர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது 3 பேரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி நிர்வாகி மந்திராலயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அறைக்கதவை உடைத்து சடலங்களை மீட்டனர்.

மேலும் அந்த அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், சரவணன் குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதாகவும், அவர்களின் இழப்பை தாங்க முடியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் தங்கள் உடல்களுக்கு மந்திராலயத்திலேயே இறுதி சடங்கு செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மந்திராலயம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை