மக்கள் கருத்தை கேட்டவர் சசிகலா அணிக்கு ஆதரவு

தினமலர்  தினமலர்
மக்கள் கருத்தை கேட்டவர் சசிகலா அணிக்கு ஆதரவு


மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.,வான தமீமுன் அன்சாரி, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியை ஆதரித்தார். அவர், நாகை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் இருந்து வந்தார். கூவத்துார் விடுதிக்கு அழைத்தும் செல்லவில்லை என, தொகுதியிலேயே தங்கினார்.சில தினங்களுக்கு முன், யாருக்கு ஆதரவு தர வேண்டும் என, கருத்து கேட்க, தொகுதி அலுவலகத்தில் பெட்டி வைத்தார். இதில், 2,000 பேருக்கு மட்டும், கருத்து சொல்ல விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

'மக்கள் விருப்பப்படியே ஓட்டளிப்பேன்' என, வாக்கு கொடுத்தார். ஆனால், நேற்று நடந்த ஓட்டெடுப்பில், சசிகலா அணிக்கு ஆதரவாக ஓட்டளித்தார்.

- நமது நிருபர் -

மூலக்கதை