மக்கள் விரும்புவது ஓ.பன்னீர்செல்வம் அரசையே மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
மக்கள் விரும்புவது ஓ.பன்னீர்செல்வம் அரசையே மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் பேட்டி

மக்கள் விருப்பப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பேன் என மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர். நட்ராஜ் அறிவித்தார். மக்கள் விருப்பப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பேன், நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்பேன் என்று அவர் கூறியதை அடுத்து பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இதனையடுத்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா எம்.எல்.ஏ.க்களும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

மக்கள் விரும்புவது ஓ.பன்னீர்செல்வம் அரசையே என கூறிஉள்ளார்.

மூலக்கதை