ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவில் மாற்றம் - திருப்பதி தேவஸ்தானம் புது ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவில் மாற்றம்  திருப்பதி தேவஸ்தானம் புது ஏற்பாடு

திருமலை - திருப்பதி அன்னமய்ய பவனில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ்  நிருபர்களுக்கு  அளித்த பேட்டி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் சிலர் ரூ. 300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில், இதுவரை ஒரே நாளில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபருக்கு மட்டுமே முன்பதிவு செய்யும் திட்டம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டதால், ஒரே நாளில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபருக்கு முன்பதிவு செய்யமுடியும். இந்த திட்டம் நாளை(இன்று) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்படி இன்று காலை இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

.

மூலக்கதை