3 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹரிபூர் பகுதிகளை சேர்ந்தவர்கள்  முகமது யூனூஸ் மற்றும் அப்துல்லா. காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியை சேர்ந்தவர் முஜாபர் அகமத் ரோதட். இவர்கள் 3 பேரும் லஷ்கர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 2007ல் காஷ்மீர் ராணுவ முகாமை தாக்கும் திட்டத்துடன் வந்தபோது மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கோன் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மூலக்கதை