தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து பெருமை அடைகிறேன்: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்

டெல்லி: தமிழர்களின் கலாச்சார உணவுகளை காக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ட்விட்டரில் இன்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பண்பாட்டை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து பெருமை அடைகிறேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் வளர்ச்சியில் புதிய உச்சங்களை அடைய மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை