ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது

தினகரன்  தினகரன்
ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது

டெல்லி : காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுப்பட்டனர். எதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் ரூபாய் நோட்டு பிரச்சனை பற்றி விவாதம் நடத்துமாறு துணைத்தலைவர் சூரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலங்களவையில் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிறகு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மூலக்கதை