இரண்டு மாத பெண் குழந்தையை தரையில் மோதி கொன்ற ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
இரண்டு மாத பெண் குழந்தையை தரையில் மோதி கொன்ற ...

ஹரியானா மாநிலத்தில் மருமகள் மீது உள்ள ஆத்திரத்தில் மாமியார் இரண்டு மாத பெண் குழந்தையை தரையில் மோதி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
  ஹரியானா மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள சோனிபட் பகதுர்கர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதன் தந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து குழந்தையை பார்க்கவில்லை.   மேலும் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் என்றும் மிரட்டியுள்ளனர்.

அவர்களின் கோபம் தணியட்டும் என்று காத்திருந்த அந்த இளம்பெண், குழந்தை பிறந்த இருமாதாங்கள் கழித்து நேற்று முன்தினம் கைக்குழந்தையுடன் பகதுர்கர் பகுதியில் உள்ள தனது புகுந்தவீட்டுக்கு சென்றுள்ளார்.   அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் தகராறு செய்த மாமியார், அந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நெறித்து, ஆவேசமாக தரையில் மோதி அடித்தார்.   இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தனது மகளை தூக்கிகொண்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.   அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் கணவரின் வீட்டுக்கு வந்த குழந்தையின் தாயிடம் இருந்த இறந்த குழந்தையை பறித்த மாமியார், மாமனார் மற்றும் அவரது கணவர் ஆகிய மூவரும் குழந்தையை ரகசியமாக புதைத்து விட்டனர்.   இதுதொடர்பாக, சோனிபட் நகரில் உள்ள தனது பெற்றோருக்கு அந்த இளம்பெண் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தையின் பிரேதத்தை நேற்று தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

.

மூலக்கதை