வடகிழக்கு மாநிலங்களில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட இந்த லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் இது 5.4 ஆக பதிவாகியுள்ளது.
கிழக்கு கேரோ மலையில் நில நடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக ஷில்லாங் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.