உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி: வாசன்

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி: வாசன்

மதுரை, "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்" என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.

மதுரையில் அக்கட்சியின் வட்டார, நகர், பேரூராட்சி தலைவர்கள் அரசியல் மாநாடு வாசன் தலைமையில் நடந்தது.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதற்கு கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம்.

நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் பிரச்னை களுக்கு தீர்வுகாண வேண்டும். தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடரும். இதுதொடர்பான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டனஎன்றார்.

மாநாட்டில் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், மதுரை நகர் தலைவர் சேதுராமன், மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி, காந்தி, முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், உடையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை