'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?

தினமலர்  தினமலர்
பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?

புதுடில்லி: 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின், முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், 'அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி'யின் முன்னாள் தலைவர், ஜேனட் யெல்லன் உட்பட பல பிரபலங்கள் விண்ணப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.


சமீப காலமாக, பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்க உள்ளார் என, அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ரகுராம் ராஜன், பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என தெரிய வந்துள்ளது. ராஜன் மட்டுமின்றி, இத்துறையைச் சேர்ந்த பிரபலமான பலரும் விண்ணப்பிக்கவில்லை என்பதும், தற்போது தெரிய வந்துள்ளது.


இதற்கு முக்கிய காரணம், 'பிரெக்ஸிட்' என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவது சம்பந்தமான பிரச்னைகள் தான். இது போன்ற காரணங்களால், பேங்க் ஆப் இங்கிலாந்தின் தற்போதைய கவர்னரான, மார்க் கார்னி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை பதவியில் நீடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை