பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு

புதுடெல்லி : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியுடன் நேற்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். தனது பயணத்தின் 3வது மற்றும் இறுதி நாளான நேற்று அவர் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இரு தலைவர்களும் சந்திக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், ‘இரு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் இந்தியா நிதியுதவி செய்யும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை