தெலங்கானாவில் ரூ2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்வோம்: ராகுல் காந்தி உறுதி

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் ரூ2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்வோம்: ராகுல் காந்தி உறுதி

பாயின்ஷா: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ெதலங்கானாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிர்மல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். தெலங்கானாவில் தங்களுடைய பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரேகட்டத்தில் ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு அளித்ததன் மூலம் நாட்டின் காவலாளி என்பதில் இருந்து கொள்ளைக்காரனாக மாறியுள்ளார். இவ்வாறு ராகுல் ேபசினார்.

மூலக்கதை