நானா படேகர் மீதான வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு

தினமலர்  தினமலர்
நானா படேகர் மீதான வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு


மும்பை: பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் நானா படேகர், சமீபத்தில் வெளியான ரஜினி நடித்துள்ள காலா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா டி.வி.ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நடிகர் நானா படகேர் கடந்த 2008- ம் ஆண்டு ஹிந்திபடப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்., என்னை போன்று பல நடிகைகளை அவரை வன்முறையுடனே கையாண்டுள்ளார். இப்படிபட்ட நடிகர்களுடன் நடிக்கும் பெரிய நடிகர்கள் நடிகைகள், முக்கியமாக கருத வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நேற்று தனது வழக்கறிஞருடன் ஒஷிவாரா போலீஸ் ஸ்டேசன் சென்ற தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர், உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துபூர்வ புகார் மனு கொடுத்தார். போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


மூலக்கதை