ஏழுமலையான் கோயிலில் நாளை கருட சேவை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏழுமலையான் கோயிலில் நாளை கருட சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நாளை கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. இரவு 7️ மணி முதல் 9 மணி இடையே மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இதையொட்டி, பெருமாளின் அவதாரங்களையும், மகிமைகளையும் உலகிற்கு எடுத்துரைத்த ஆழ்வார்கள் எழுதிய நான்காயிர திவ்ய பிரபந்தத்தை  பக்தர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் திவ்ய பிரபந்த பாராயண  மகோத்சவத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி 25ம்தேதி காலை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மாநிலங்களில் இருந்து 230 பேர் திருமலைக்கு வரவழைக்கப்பட்டு காலை 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் ஜீயர்களின் சொற்பொழிவு நடத்த உள்ளனர்.

.

மூலக்கதை