பெங்களுருவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது இரும்புசாரம் விழுந்து விபத்து

தினகரன்  தினகரன்
பெங்களுருவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது இரும்புசாரம் விழுந்து விபத்து

பெங்களுரு: பெங்களுருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது கட்டுமான பணிகள் நடைபெறும் கட்டிடத்தில் இருந்து இரும்புசாரம் விழுந்து விபத்துக்குள்ளானது. பெங்களூருவை சேர்ந்த சந்தன் என்பவர் அல்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெறும் கட்டிடத்தில் இருந்து இரும்புசாரம் விழுந்ததில் இதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மீது அல்சூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் எவ்வளவு கவனமாக சென்றாலும் மற்றவர்களின் அலச்சியத்தால் விபத்துகள் எந்த வடிவத்திலும் ஏற்படலாம் என்பதை இந்த விபத்து விளக்குகிறது.

மூலக்கதை