ஊடுருவ பணம் தரும் பாக்., பயங்கரவாதிகள்

தினமலர்  தினமலர்
ஊடுருவ பணம் தரும் பாக்., பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பணம் கொடுத்து, பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சாம்பா மாவட்டத்தில், பாக்.,கின், 'ஜெய்ஷ் - இ - முகமது' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, லாரி டிரைவரான ரியாஸ் அகமது என்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

அவன் போலீசாரிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ உதவினால், பாக்., பயங்கரவாதிகள், 50 ஆயிரம் ரூபாய் தருகின்றனர். இதுவரை, 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அழைத்து வந்துள்ளேன்.இவ்வாறு அவன் கூறினான்.

மூலக்கதை