அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி: 2 பேர் கைது

தினமலர்  தினமலர்
அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி: 2 பேர் கைது

பிதோராகர் : உத்தரகண்ட் மாநிலத்தில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்ல சதி செய்த இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான நேற்று, உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாவட்டத்தில், ராணுவம் சார்பில் நடத்தப்படும், மருத்துவ முகாமை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், ராணுவ அமைச்சரை கொல்வதற்கான சதித் திட்டம் பரவி வருவதாக, உத்தரகண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குடிபோதையில் இருந்த அவர்களுக்கு, பயங்கரவாத தொடர்பு உள்ளதா, ஆயுதங்கள், வெடி பொருட்கள் வைத்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர். வாட்ஸ் ஆப் குரூப்பின் அட்மினை கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

மூலக்கதை