ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !!
இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது. இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.