சோபியான் பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோபியான் பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: சோபியான் பகுதியில், இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரால், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்ததில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்றும், பெயர் முகமது அப்சல் (35) என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை